பேஸ்புக் பயன்படுத்துவோர்களுக்கு அதிர்ச்சி தகவல்: 5 ல் ஒருவரின் கணக்கில் மற்றவர்கள் ஊடுருவல்.

சமூக வலைத்தங்களில் அதிகமானோரின் ஆதரவைப் பெற்று 2012ம் ஆண்டே 100 கோடிக்கும் மேற்பட்ட பயனாளர்களை தாண்டி நிற்கும் பேஸ்புக் நிறுனம் தற்போது 2016ம் ஆண்டின் கணக்குப் படி 176 கோடி பயனாளர்களை கொண்டுள்ளது.


இதுகுறித்து பிரிட்டன், கொலம்பியா, பல்கலைக்கழகத்தின் சார்பில்
ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
அந்த ஆய்வில் ஒரு அதிர்ச்சி  தகவல் வெளியாகியுள்ளது.
முகநூல் என்று சொல்லப்படும் பேஸ்புக் பயன்படுத்துவோர்களில் 5 ல் ஒருவரின் கணக்கை அவருக்கு தெரியாமல், அவரது நண்பர், காதலர், அல்லது குடும்ப உறுப்பினர்களே ரகசியமாக ஊடுருவி பார்க்கின்றனர் என தெரியவந்துள்ளது.
பெரும்பாலும் ஸ்மார் போன், வழியாக இந்த ஊடுருவல் நடப்பதாகவும் கூறப்படுகிறது. 

No comments:

Popular Posts

Powered by Blogger.